Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 18, Verse 55

4க்1த்1யா மாமபி4ஜானாதி1 யாவான்யஶ்சா1ஸ்மி த1த்1த்1வத1: |

1தோ1 மாம் த1த்1த்1வதோ1 ஞாத்1வா விஶதே113னன்த1ரம் ||55||

பக்த்யா--—அன்பான பக்தியினால்; மாம்—--என்னை; அபிஜானாதி—-அறிகிறார்; யாவான்--—எவ்வளவு; யஹ ச அஸ்மி--—நான் உள்ளபடியே; தத்வதஹ--—உண்மையில்; ததஹ--—பின்னர்; மாம்---—என்னை; தத்வதஹ—உண்மையில்; அறிந்தவுடன்; விஶதே--—முழு உணர்விற்குள் நுழைகிறார்.; தத்-அனந்தரம்—--அதன்பின்.

Translation

BG 18.55: என்மீது அன்பான பக்தி செலுத்துவதன் மூலம் மட்டுமே நான் யார் என்று ஒருவருக்குத் தெரியும். பின்னர், என்னை அறிந்தவுடன், என் பக்தன் என்னைப் பற்றிய முழு உணர்விற்குள் நுழைகிறார்.

Commentary

ஆழ்நிலை அறிவில் ஒருவர் பக்தியை வளர்த்துக்கொள்வதாக ஸ்ரீ கிருஷ்ணர் முந்தைய வசனத்தில் கூறினார். இப்போது பக்தியின் மூலம் மட்டுமே ஒருவர் கடவுளின் ஆளுமையை அறிய முடியும் என்று கூறுகிறார். முன்பு, ஞானி கடவுளை குணங்கள் இல்லாத (நிர்குணம்), பண்புகள் அற்ற நிர்விஶேஷ்), உருவமற்ற (நிராகார்) ப்ரஹ்மன் என்று உணர்ந்தார். ஆனால் ஞானி கடவுளின் தனிப்பட்ட வடிவத்தை உணரவில்லை. அந்தத் தனிப்பட்ட வடிவத்தின் ரகசியத்தை கர்மம், ஞானம், அஷ்டாங்க யோகம் அல்லது வேறு எந்த வழியிலும் அறிய முடியாது. அன்புதான் சாத்தியமற்றவற்றுக்கான கதவைத் திறந்து, அணுக முடியாததற்கு வழி செய்கிறது. கடவுளின் பெயர்கள், வடிவங்கள், நற்பண்புகள், பொழுது போக்குகள், தங்குமிடங்கள், மற்றும் கூட்டாளிகள் ஆகியவற்றின் பரம ரகசியம் கலப்பற்ற பக்தியின் மூலம் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் இங்கே கூறுகிறார். அன்பின் கண்களைக் கொண்டிருப்பதால் பக்தர்கள் கடவுளைப் புரிந்துகொள்கிறார்கள்.

பத்ம புராணம் மேற்கூறிய உண்மையை விளக்கும் ஒரு அழகான சம்பவத்தைக் குறிப்பிடுகிறது.

ஜாபாலி என்ற முனிவர் மிகவும் பிரகாசமாகவும் அமைதியாகவும் உள்ள ஒரு கன்னிப்பெண் காட்டில் தியானம் செய்வதை கண்டார். அவர் அந்த கன்னிப்பெண்ணைத் தன்னுடைய அடையாளத்தையும் தியானத்தின் நோக்கத்தையும் வெளிப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். அப்பெண் பதிலளித்தார்:

ப்3ரஹ்மவித்4யாஹமது2லா யோகி3ந்தி3ரியைர்யா ச1 ம்ருக்3யதே1

ஸாஹம் ஹரி ப1தா3ம்போஜ கா1ம்யயா ஸீசி1ரம் த11

ச1ராமயஸ்மின் வனே கோ3ரே த்4யாயந்தி1 பு1ருஷோத்11மம்

ப்3ரஹ்மாநந்தே3ந பூ1ர்ணாஹம் தே3நாநந்தே3ந த்1ரிப்தா1தீ4ஹி

1தா2பி1 ஶுன்யமாத்1மானம் மன்யே கி1ருஷ்ணரதி1ம் வினா

‘நான் ப்3ரஹ்ம வித்3யா (தன்னை அறியும் விஞ்ஞானம், இது இறுதியில் கடவுளின் ப்ரஹ்மத்தை உணர்ந்து கொள்வதற்கு வழிவகுக்கிறது). பெரிய யோகிகளும், மாயவாதிகளும் என்னை அறிய துறவு செய்கிறார்கள். இருப்பினும், கடவுளின் தனிப்பட்ட வடிவமான தாமரை பாதங்களில் அன்பை வளர்க்க நான் கடுமையான துறவறங்களைச் செய்கிறேன். நான் ப்ரஹ்மனின் பேரின்பத்தால் நிரம்பியிருக்கிறேன். ஆனாலும், பகவான் கிருஷ்ணரிடம் அன்பான இணைப்பு இல்லாவிட்டால், நான் வெறுமையாகவும் சூன்யமாகவும் உணர்கிறேன்.’ எனவே, கடவுளின் தனிப்பட்ட வடிவத்தின் பேரின்பத்தை அனுபவிக்க வெறும் அறிவு போதாது. பக்தியின் மூலமாகவே ஒருவர் இந்த இரகசியத்திற்குள் நுழைந்து முழு இறை உணர்வை அடைகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
18. மோக்ஷ ஸன்யாஸ யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!